Wednesday, March 09, 2022

பல லோகங்கள்

இறைவன் ஒருவனே. அவன் இருவித அருள் வழங்குகிறான். மூன்று வித வடிவங்கள் கொள்கிறான். முக்காலமும் செயல்படுகிறான். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கனையும் தானே உணர்ந்து உயிர்கட்கு உணர்த்துகிறான். இதனை விளக்கும் திருமந்திரப் பாடல், இறைவன் ஏழு உலகையும் தாண்டியவன் என்று குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும். உயிர் உலகை விட்டு நீங்கியதும் எங்குச் செல்கிறது? அதாவது, ஒரு மனிதரோ விலங்கோ வேறு எந்த உயிரினமோ மரணமடைந்ததும் அந்த ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து எங்குச் செல்கிறது? சொர்க்கம் அல்லது நரகம் என்று இரண்டையே பொதுவாகப் பலர் கூறுவர். உண்மையில் இந்த இரண்டினையும் தாண்டி வேறு பல உலகங்கள் உள்ளன. அவற்றில் வசித்து வந்த தேவர்கள், ஞானியர் போன்றோரும் இந்த மண்ணுலகுக்கு இறங்கி வந்துள்ளனர். அவர்கள் மூலமாகவே மேல் உலகம் பற்றிய குறிப்புகள் மனிதருக்குக் கிடைத்தன. இறைவனின் அருளால் நல்ல ஞானம் மனிதர்க்குக் கிட்ட அவர்கள் உதவினர். திருமூலர் அத்தகைய ஓர் இறைத்தூதர் ஆவார்.அவர் வழங்கிய திருமந்திரத்திலிருந்து ஒரு பாடல்: >ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான் குணர்ந்தான் ஐந்து வென்றனன் ஆறுவிரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந்தான் உணர்ந்தெட்டே. (திருமந்திரம் பாடல் 1) > எல்லா உலகங்களுக்கும் மேலான உலகமாகிய சிவலோகத்திலிருந்து வந்தவர் திருமூலர். அவர் வாக்கு இறைவன் நமக்களித்த அருட்கொடையாகும். தமிழ் மூவாயிரம் எனப் பெயர்பெற்ற திருமந்திரத்தைப் படித்துணர்ந்து வெவ்வேறு உலகங்கள் பற்றித் தெளியலாம். ௐம் நம சிவாய. பின் குறிப்பு: தொடர்புடைய எனது ஒளிக்காட்சியைப் பார்க்கவும். இணைப்பு: https://www.youtube.com/watch?v=r5apJT6R6eQ நன்றி.

1 comment:

சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ்வார்  (அதிகாரம்: கடவுள் வாழ்த்து  குறள் எண்: 3 ) இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வரும...