Thursday, September 27, 2007

சிங்கை மா இளங்கண்ணன் நூல்களில் நல்ல தமிழ்ச் சொற்கள்

சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர் சிங்கை மா இளங்கண்ணன். சிங்கப்பூரின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் பெற்றவர். 1960 -களின் மத்தியிலிருந்து எழுதி வருகிறார். சுமார் 30, 40 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர்த் தமிழ் மக்களிடையே, குறிப்பாக அதிகப் படிப்பறிவில்லாத நடுத்தர வர்க்க மக்களிடையே நிலவிய முக்கிய பிரச்சினைகளை அவரது படைப்புகள் மூலம் இன்றைய தமிழர்கள் உணரலாம். அதே சமயம், அந்தப் பிரச்சினைகளுக்கு நீண்ட காலத் தீர்வாக விளங்கும் கல்வியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் சீரிய நோக்கமும் இவரது கதைகளில் வெளிப்படுகின்றது. பல கலாசார , பல்லின சிங்கை சமூகத்தின் சூழல் இவரது எழுத்துக்களில் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது. தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவோடு வெளீயிடப்பட்ட இவரது நூல்கள் தேசிய நூலகக் கிளைகளில் கிடைக்கின்றன. திரு சிங்கை மா இளங்கண்ணனின் எழுத்தில் உள்ள ஒரு முக்கிய சிறப்பு என்னவென்றால் அவர் புதுப்புது நற்றமிழ்ச் சொற்களை அழகாக அறிமுகப்படுத்துவார். மொழிக் கலப்பைத் தவிர்த்து நல்ல தமிழில் எழுத விரும்பும் இளம் எழுத்தாளர்க்கு சிறந்த வழிகாட்டியாக அவரைக் கூறலாம். நான் அவரது நூல்களில் பார்த்துப் பயனடைந்த சொற்கள் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்.

எரிவளி - Gas
அரிகட்டை - Cutting Board
இயங்கி - Switch
பயின் மரம் - Rubber Tree
கணிதர் - Astrologer
கல்லெடை - Pound
ஆகூழ் - Luck
குப்பி - Bottle
ஆளோடி - Verandah
நெகிழி - Plastic
சுமை உந்து - Lorry
புறநோக்கி - Door lense
கழுவுதொட்டி - Washbasin
காட்சிப் பேழை - Showcase
நடையர் -Pedestrians
தண்மி - Refrigerator
ஊடுகதிர் - X ray
வானூர்தி - Aeroplane
மணக்குப்பி - Perfume bottle
துடிப்பறிமானி - Stethoscope
கன்னெய் - Petrol
மழிதகடு -Shaving Blade
கோப்பேடு -File
மீவான் - Helicopter
தூவல் -Pen
ஊர்தி - Car
மாச்சில் - Biscuit
ஏதிலி -Orphan

Monday, August 20, 2007

The Vedas - வேதங்கள்

இந்தியாவின் பழைய நூல்களில் குறிப்பிடத் தகுந்தவை வேதங்கள் எனும் நூல்கள்.
வேதம் என்றால் அறிவு என்று பொருள். பல விவரங்களை அறிவிப்பதால் இவற்றை வேதங்கள் என்றனர். இந்த நூல்கள் இந்தியாவில் பண்டைய காலத்தில் நிலவிய பழக்க வழக்கங்களை ஓரளவு விளக்குகின்றன. மேலும் இவை பண்பாட்டுக் கலப்பையும் தெரிவிக்கின்றன. மிகப் பழங்காலத்திலேயே இந்தியாவில் பல்வேறு வகை மக்களும் பலவகைப் பண்பாடுகளும் இருந்தன என்பதையும் இது தெரிவிக்கிறது. வேதங்கள் பற்றி நிறைய ஐயங்கள் மக்கள் மனதில் நிலவுவதை என்னால் உணர முடிகிறது. பண்பாடு தொடர்பான சொற்பொழிவுகளை நான் ஆற்றும்போது பலர் பலவித வினாக்களை எழுப்பி விளக்கம் கேட்கின்றனர். சமஸ்கிருத மொழியில் வெளிவந்த வேத புத்தகங்களின் கருத்துகளை நான் இப்போது தொகுக்கத தொடங்கியுள்ளேன்.
சமஸ்கிருத மூலத்தின் ஆங்கில மற்றும் தமிழ் விளக்க நூல்கள் பெரும் தொகுதிகள் என்பதால் அவற்றிலிருந்து சாரத்தை மட்டும் எடுத்து சுருக்கமாக அளிக்கிறேன். நான் படிக்கப் படிக்க கூடுதல் விவரங்களை சேர்த்து எழுதி வருவேன். என்னோடு சேர்ந்து நீங்களும் படிக்க வாருங்கள்.

முதலில் ரிக் வேதம்:
இது ஒரு பாடல் தொகுப்பு.
இதில் உள்ள வரிகளைப் பாடியவர்கள் பல பேர்.

முதல் மண்டலப் பாடல்களும் அவற்றைப் பாடியவர்களும்:

1) விசுவாமித்திர முனிவரின் மகன் ரிஷி மதுச்சந்தச வைசுவாமித்திரன் பாடல்கள்:
அக்கினி (நெருப்பு), வாயு (காற்று), இந்திரன், இந்திர வாயுக்கள், மித்ரா வருணர்கள்,
அசுவினிகள், விசுவதேவர்கள், சரசுவதி, சதக்கிருது ஆகியோரை நோக்கிப் போற்றிப் பாடப்பட்டவை.

2) ரிஷி ஜேதா மது சந்தசன் பாடல்கள்:
இந்திரனைப் போற்றிப் பாடுவது

3) ரிஷி மேதாதிதி காண்வன் பாடல்கள்:
அக்கினி, இந்திரன், சமிந்து, தனூன பாதன், நராம்சன், இளை, தருப்பை, கதவுகள், விடியற்காலை, இரவு, ஹோதாக்கள், மூன்று தேவிகள், துவஷ்டா, வனஸ்பதி, சுவாஹா, விசுவதேவர்கள், பிரகஸ்பதி, பூஷண், பகன், ஆதித்தியர்கள், மருத்துகள், ருது, நேஷ்டிரி, இந்திரா வருணர்கள், பிரமணஸ்பதி, சோமன், தட்சிணை, அஸ்வினிகள், சவிதா, தேவிகள், இந்திராணி, சோதி, புவி, பூமி, தேவர்கள், விஷ்ணு, வாயு, பூஷா, விருகனி மாதா, சலங்கள், சோமன் முதலியோரை அழைத்துப் பாடுவதாக அமைந்தவை.

4) ரிஷி சுபச்சேனன்(அஜகர்த்தனின் புதல்வன்) பாடியவை:
அக்கினி, சாவித்திரி, சவிதா, பாகா, வருணன், பன்னிரு சந்திரர்கள், விசுவ தேவர்கள், துவஜன், இந்திரன், வனஸ்பதி, அசுவினிகள், உஷை முதலியோரை நோக்கிப் பாடுவது.

5) ரிஷி ஹிரண்யஸ்தூபன் (அங்கிரசனின் மகன்) :
அக்கினி, இந்திரன், அசுவினிகள், சவிதா ஆகியோரைப் ப்ற்றிப் பாடியவை

6) ரிஷி கண்வன்(கோரனின் புதல்வன்) -
அக்கினி, மருத்துகள், பிரம்மணஸ்பதி, வருணன்,பூஷா ஆகியோரைப நோக்கிப் பாடுவது

7) ரிஷி கண்வ கௌரன் -
ருத்திரன், சோமன், இருவரை நோக்கிப் பாடுவது

8) ரிஷி பிரஸ் கண்வ காண்வன் -
அக்கினி, அசுவினிகள், உஷை, சூரியன் ஆகியோரைப் பாடுவது

9) ரிஷி சவ்ய ஆங்கிரசன் - இந்திரனை நோக்கிப் பாடுவது

10) ரிஷி நோதாகௌதமன் - அக்கினி, இந்திரன், மருத்துக்கள் ஆகியோரை நோக்கிப் பாடுவது.

..............

குறிப்புகள்:
இந்தப் பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் இயற்கையை போற்றிப் பாடுவதாக அமைந்தவை. நெருப்பு மாயமாக மறைவதையும் மின்னல் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் இணைப்பாக உருவாவதையும் கண்டு மலைத்த அன்றைய ஆரிய மக்கள் அவற்றை தேவதைகளாக உருவகம் செய்து வழிபட்டனர். இது கிரேக்கப் பண்பாட்டுடன் பெரிதும் ஒற்றுமை கொண்டுள்ளது. ரிக் வேதப் பாடல்களில் பெரும்பாலும் பசு, குதிரை முதலிய விலங்குகள் முக்கிய இடம்பெறுகின்றன. ஆரியர்கள் கிழக்கு பாரசீகத்தில் (Persia) இருந்து இந்தியா வந்தவர்கள் என்பதால் அவர்களின் முக்கிய உணவாக மாமிச உணவே இருந்தது. அவர்கள் பசுக் கூட்டத்தை பாதுகாத்து வந்தார்கள். அவை திருடப்பட்டால் அவற்றை மீட்டுத்தருமாறு வேண்டிப் பாடினார்கள். அத்தகைய பாடல்கள் ரிக் வேதத்தில் அதிகம் உள்ளன.

இந்தப் பாடல்கள் இந்தியப் பண்பாட்டை அவ்வளவாக எடுத்துரைக்கவில்லை; இவை உண்மையில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் இருந்த ஐரோப்பிய கலாசாரத்தைதான் தெளிவாக்குகின்றன என்று Max Muller எழுதியிருக்கிறார்.

காரணங்கள்:
1)வேதங்கள் சமஸ்கிருத மொழியில் உள்ளன. இந்த மொழி ஓர் இந்தோ-ஐரோப்பிய மொழி. இது ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம் தாய் என போற்றப்படுகிறது. கிரேக்க, லத்தீன், சுலோவேனிய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நிறைய ஒற்றுமை உண்டு.

2) பசு இறைச்சியை உண்ணும் வழக்கம் இந்திய பாரம்பரிய வழக்கமல்ல. இந்திய செம்மொழியான தமிழில் உள்ள பல இலக்கியங்கள், பசு உட்பட்ட இறைச்சி வகைகளைத் தவிர்த்து சைவ உணவை உண்ணத் தூண்டும் அறிவுரைகளைக் கொண்டுள்ளன. மாறாக ரிக் வேதத்தில் வேள்விகள் நடத்தி அவற்றில் மாட்டு இறைச்சியைப் படைத்து உண்ணும் வழக்கம் குறிப்பிடப் படுகிறது. கன்றின் இறைச்சி தேவர்க்கு உகந்தது என்றும் குறிப்பு உள்ளது. இவை இஸ்லாமிய நாடுகளில் இன்றும் உள்ள மாடு பலியிடும் பழக்கங்களுக்கு ஒத்துப் போவதால் ரிக் வேத கலாசாரம் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்த ஒன்று எனக் கருதப்படுகிறது.

3) மண்டலம் 1. பாடல் 51-இல் 8-ஆம் செய்யுளில் ஆரியர்களையும் தஸ்யுக்களையும் வேறுபடுத்திப் பார்க்குமாறு ஒரு வரி உள்ளது. வேத மொழியைப் பேசியவர்கள் ஆரியர்கள் என்றும் அவர்களுக்கு முன்பு இந்தியாவில் வசித்து வந்த பூர்வீக குடிமக்கள் தஸ்யுக்கள் என்றும் இந்தப் பாடலில் குறிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



மற்றவை பின்னர்.
அன்புடன்,
மீனாட்சி சபாபதி

Monday, August 06, 2007

I share what I read

book title: Understanding Multi cultural Malaysia
authors: Asma Abdullah, Paul B. Pedersen
publisher: Prentice Hall
library classification number: 306.09595

Page 89:
The Malay Values Orientation, Background

The ancestors of the Malays came from mainland Southeast Asia and the Indonesian islands around 1500 B.C. after migrating from the southern parts of China. They settled along the coastal areas of the Malay Peninsular, pushing the sparse aborigine population of Jakun and Semang into the hills and jungles of the interior. Later, the region came under the political domination of groups ruling China, Thailand, India and the island empires of Indonesia. The first Malay kingdom was formed in 1403.

Page 143:
Chinese characters and their meanings

The Chinese characters provide a lot of insights into the meaning of many contemperory concepts. Each Chinese character has a component called the radical which provides a means of organizing the characters and a clue of the basic metaphor within each character.
The word for happy combines the figure for mouth with the figure for a band of musicians, suggesting a scene of public celebration.


Page 151:
The Tamil Hindu Value Orientation, Overseas Indians

It is estimated that the Indian diaspora which is dispersed throughout Northern Europe, North America, South America, East Asia, Africa and other places out of India, is about 20 million people. Many Indians from the Indian continent came to Malaya in the 1930's to supply labor for government projects under the British colonial administration. Currently there are about 2 million Tamil Indians who are mainly found in the western states of Peninsular Malaysia.

Page 152:

The Tamil Indians in Malaysia are noted for their strong work ethics and ability to think and adapt quickly in a new country. They believe that working hard is a form of worship and it is through their trade or skills that they will come closer to God. This belief has enabled then to carry out their work and responsibilities and job demands rather seriously.

Page 162:

The Tirukural, a treatise on how man should face life says:

Greatness humbly bends, but littleness always
Spreads out its plumes, and loads itself with praise.

Simply put, it means the great will always humble himself, but the ordinary will exalt himself in self- admiration.

சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ்வார்  (அதிகாரம்: கடவுள் வாழ்த்து  குறள் எண்: 3 ) இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வரும...