Saturday, August 12, 2023

ஆண் பெண் சமத்துவம் - நம் அடிப்படை சமயக் கொள்கை

 நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்!


அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் சில வரிகள்:

"பாதி மதிநதி போதுமணிசடை

     நாத ரருளிய  குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய  மணவாளா"

முதல் இரு வரி,  பிறை சூடிய சிவபெருமான் நமக்கு அருளிய குமரேசன்  என முருகப் பெருமானைக் குறிப்பிடுகிறது.

திருமால், முருகன், அம்மன், என ஆயிரம் தெய்வங்கள் மக்களுக்கு அருளுகின்றன.  அனைத்து தெய்வங்களுக்கும் ஆணையிடும் பெருங்கடவுள்  சிவனின் அருளால்தான் நமக்கு முருகப்பெருமானின் தரிசனமும் வழிகாட்டலும் நேரடி அருளும் கிடைக்கிறது.

முருகனை வேண்டினால் கேட்டது கிடைக்கும் என்பது பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவம் ஆகும். வேண்டியது நிறைவேறிய மகிழ்ச்சியினால், மக்கள் காவடி சுமந்தும் பால்குடம் தூக்கியும் முருகனுக்கு நன்றி கூறும் அழகிய நிகழ்வு தைப்பூச நன்னாளில் நிகழ்கிறது.

மதி நதி போதும் அணி சடை என்ற வரியில், சிவபெருமான் தன் தலையில் கங்கையைச் சூடிய தன்மை கூறப்படுகிறது. அர்த்த நாரீஸ்வரரான சிவன், ஆணும் பெண்ணுமாக சமபாகத்தில் தோற்றமளித்து, உலகில் ஆன்மாக்கள் ஆணும் பெண்ணுமாகப் பிறவி கொள்ளும்போது சமமாகத் தம் அருளைப் பெறுவதை உணர்த்தினார். ஆண், பெண் இருபாலரும் சமமான தெய்வத்தன்மை கொண்டிருப்பதைக் கூறும் உயர்ந்த சமயம் இந்து சமயம்! 


பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய  மணவாளா...

இந்த வரியின் பொருள்: சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்ற

இனிய மொழியை உடைய மாதரசி குறமகளாகிய வள்ளியின்

பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே.

முருகப் பெருமான் தன் மனதுக்கினிய மனைவியின் பாதங்களைப் பிடித்துவிடுவதாக அருணகிரி நாதர் கற்பனையில் காட்சி அமைத்து இப்பாடலைப் பாடியுள்ளார். 
பெண்களை அடிமையாக எண்ணி, அவர்களை மதிக்காமல் நடக்கும் ஆண்கள் இதனைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பெரும் சக்தி கொண்ட தெய்வமான முருகன், பெண்ணுக்கு சேவகம் செய்வதாக எண்ண இடம் தருவது தமிழ்ச் சமயம்.

ஆகவே, தமிழ்ப் பண்பாடு, ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாதது; அன்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது. 
இத்தகைய நல்ல கோட்பாடுகளை உணர, தமிழர்கள் திருப்புகழையும் மற்ற பக்திப் பாடல்களையும் கற்பது நல்லது.
ஓம் முருகா!
ஓம் நம சிவாய! 


No comments:

Post a Comment

சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ்வார்  (அதிகாரம்: கடவுள் வாழ்த்து  குறள் எண்: 3 ) இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வரும...